அரசாங்கத்தின் செயற்பாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித உரிமை மீறலாக அமையாது!
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித உரிமை மீறலாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை அண்மையில் களனி பல்கலைக்கழக திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், தமது பொறுப்பு மற்றும் கடமையை நிறைவேற்றுவதற்கு தான் தவறவில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed